கொரோனாவுக்கு மேலும் ஐவர் பலி!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாவடகல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண், கண்டியைச் சேர்ந்த 70 வயது ஆண், கொழும்பு- 9 ஐ சேர்ந்த 71 வயது ஆண் மற்றும் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!