யாழ். சிறையில் மேலும் 6 கைதிகளுக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் பிசிஆர் முடிகள் இன்று கிடைக்கும்.

அத்துடன் முன்னர் பொது வைத்தியசாலை சேர்க்கப்பட்ட 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டடன. அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!