யாழ்ப்பாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொடிகாமம் பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் வியாபாரி ஒருவரும் தொற்று உறுதியானது.

நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் ஐவருக்கு தொற்று உறுதியானது. மூவர் ஆசிரியையின் குடும்ப உறுப்பினர்கள். இருவர் ஆசிரியையுடன் முல்லைத்தீவுக்கு சென்று வரும் சக ஆசிரியர்கள்.

மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்தவர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!