நாட்டிற்கு மேலும் 18 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

நாட்டிற்கு மேலும் 18 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்முதற்கட்டமாக 10 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி பெறப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

இதனிடையே நாடளாவிய ரீதியில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொலிஸ் துறையில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!