தமிழ் பெண்களுக்கு நீதி வேண்டி மாபெரும் தீப்பந்த போராட்டம்!

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லூர் பின் வீதியில் உள்ள போராட்ட களத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இப் பேரணி நாவலர் வீதியில் உள்ள ஐநா அலுவலகம் வரை செல்லவுள்ளது.

நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐநா கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் மத தலைவர்கள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!