காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று போராட்டம்!

சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டும் என கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முல்லைத்தீவில் முன்னெடுக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தன்று, மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்

காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரம் பகுதியில் நிறைவடைய இருக்கின்றது.

எனவே தமது இன்று போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!