இருளில் மூழ்கிய வடக்கு மாகாணம்!

வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிவு 7 மணியிலிருந்து மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்த தடை 9 மணி வரை நீடித்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டனர்.

அநுராதபுரம் புதிய நகரில் உள்ள கிரிப் (Grip) மின் உபநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் காரணமாக வட மாகாணத்திற்கு அப்பால் வாழைச்சேனை, ஹபரண மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!