போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர். தமிழ் மக்கள் எவரும் காணாமல்போகவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைச் சமர்ப்பித்துள்ள நாடுகள் இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!