யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்தகாலங்களில் ஊழல் மோசடி இடம்பெற்றதாக அரசியல் உள்நோக்கத்துக்காகவே கூறப்படுகின்றது. எந்த விசாரணைக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.
இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.சபையின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இவை பற்றிய எந்த விசாரணைக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். முழு ஒத்துழைப்பும் வழங்குவேன்.
வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த அமைச்சர்களுக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த விசாரணையின் பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளர்.எனவே யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!