கடந்த மாநகர ஆட்சியில் ஊழலா? விசாரணை நடத்துங்கள்- முன்னாள் மேஜர்!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்­த­கா­லங்­க­ளில் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக அர­சி­யல் உள்­நோக்­கத்­துக்­கா­கவே கூறப்­ப­டு­கின்­றது. எந்த விசா­ர­ணைக்­கும் நான் தயா­ரா­கவே இருக்­கி­றேன்.

இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் மேய­ரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா தெரி­வித்­தார்.சபை­யின் முத­லா­வது அமர்வு நேற்று இடம்­பெற்­ற­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளைப் பார்த்­துப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்­கள் என்­மீது ஊழல் குற்­றச்­சாட்டை முன்­வைக்­கின்­ற­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் அனைத்­துமே அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்­டவை. இவை பற்­றிய எந்த விசா­ர­ணைக்­கும் நான் தயா­ரா­கவே இருக்­கி­றேன். முழு ஒத்­து­ழைப்­பும் வழங்­கு­வேன்.

வடக்கு மாகாண சபை­யில் அங்­கம் வகித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. அந்த விசா­ர­ணை­யின் பின்­னர் அவர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளர்.எனவே யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஊழல் தொடர்­பாக விசா­ரணை செய்ய குழு ஒன்றை நிய­மிக்க வேண்­டும்.அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வேன் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!