கஜகஸ்தானில் நண்பனை கொன்று பூனைக்கு விருந்தாக்கிய கொடூரன்!

கஜகஸ்தானில் குடிபோதையில் வாக்குவாதம் முற்றியதால், நபர் ஒருவர் நண்பனைக் கொலை செய்து உடல் உறுப்புகளை பூனைகளுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது. கஜகஸ்தானில் Karaganda நகரத்தில் வசிக்கும் Arman (33), தனது அண்டை விட்டு நண்பரான Daniyar (37) என்பவரை மாலையில் வோட்கா பார்ட்டிக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அவரும் பல வோட்கா போத்தல்களை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இருவரும் அளவுக்கு அதிகமாக மணிக்கணக்கில் குடித்துள்ளனர்.

குடிபோதையில் அவர்களிடையே பேச்சுவார்த்தை பெரும் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற Arman நண்பரை சமையல் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் மார்ச் 2-ஆம் திகதி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக Daniyar காணாமல் போனதையடுத்து, சந்தேகத்துக்கு உள்ளான அவரது உறவினர்கள், பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், Daniyar கடைசியாக Arman வீட்டுக்கும் நுழைந்ததை பார்த்ததாக ஒரு சாட்சியம் கிடைத்ததையடுத்து, அவரது வீட்டுக்குள் சோதனை நடத்தினர். அப்பூதி அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அவரது வீட்டில் Daniyar-ன் உடல் பக்கங்கள் அங்கங்கு கிடந்துள்ளது. மேலும் வீட்டின் பின்பக்க ஜன்னலின் உட்புறம் முழுவதுமாக இரத்தமாக இருந்துள்ளது. ஜன்னலுக்கு வெளியே தரையில் சில உடல் எச்சங்கள் கிடந்துள்ளது.

Arman அவரைக் கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி ஜன்னல் வழியாக தெரு பூனைகளுக்கு உணவாக வீசிவந்துள்ளார்.

அவர் சில நாட்களாக இறைச்சி துண்டுகளை பூனைகளுக்கு விசியதைப் பார்த்த ஒரு சாட்சிகள், Arman ஒரு பூனை விரும்பி என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், Arman கைது செய்யப்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்தையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!