அசாத் சாலியின் கூற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை..?

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றும் பல்வேறு தரப்பினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் உள்ளிட்ட பலர் இன்றும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சட்டம் தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்திருந்த கூற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினமும் பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்த நிலையில் நாட்டின் சட்டத்தை சவாலுக்குட்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!