உருத்திரபுரீச்சரம் சிவன் ஆலய வளாகத்தில் அகழ்வாய்வுக்கு திட்டம்!

கிளிநொச்சியில் உருத்திரபுரீச்சரம் சிவன் ஆலய வளாகத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி தொல்பொருள் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் நேற்று துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கோவில் அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!