யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். வீதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் திருத்துனர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மல்லாவி மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள். கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!