வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்வு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களின் பி.சி.ஆர் சோதனைகள், அத்துடன் வந்த நாளில் எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் படி அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

வீடு சென்ற பின்னர், அப்பகுதியின் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மீதமுள்ள 7 நாட்களை வீட்டில் செலவிட வேண்டும்.

இதற்கிடையில், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் செயல்முறையை புதுப்பிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும் இலங்கை குடிமக்கள் / இரட்டை குடியுரிமை கொண்டோர் அல்லது வெளிநாட்டினர் விமான நிலையத்தில் (ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட) தடுப்பூசி தொடர்பான சான்றிதழின் மூல மற்றும் பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பி.சி.ஆர் அறிக்கையின் முடிவுகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வீடு திரும்பிய பின்னர் அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் தப்பியவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை. வீட்டிற்கு வந்து 7 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!