யாழ்ப்பாணத்தில் 33 பேருக்கு தொற்று – திருநெல்வேலி சந்தையில் மட்டும் 24 பேர்!

யாழ்ப்பாணத்தில் 33 பேர் உள்ளிட்ட மேலும் 44 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 3 கைதிகளுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் மூவருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். ஒருவர் யாழ்ப்பாணம் மருத்துவ பீட மாணவன். ஒருவர் சுன்னாகம் தொற்றாளியுடன் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் தொற்று உறுதியானது.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மண்டைதீவுக்கு கடலுணவு வாங்குவதற்காகச் சென்றவர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் புதுக்குடியிருப்பிலும் இருவர் மல்லாவியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

பளையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!