எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான ஒன்றுகூடல்களுக்கு அரசாங்கம் தடை!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான ஒன்றுகூடல்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் பயணத்தடை விதிப்பது குறித்த இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு ராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இன்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் நிமித்தம் ஒன்றுகூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டிகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சநிலைமை தொடர்ந்தும் நீடிப்பதன் காரணமாக சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!