அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயினை தற்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுப்பரவலை எதிர்த்து போராடும் மக்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!