விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட கிட்டு பூங்கா முகப்பு!

யாழ்ப்பாணம் – நல்லூர், கிட்டு பூங்காவின் முகப்பு அடையாளமாகக் காணப்பட்ட ஓலை கொட்டகை நேற்று இரவு 10 மணியளவில் விசமிகளால் தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு ஏரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சட்டத்தரணி சுகாஸ்,மாநகர சபை உறுப்பினர்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,தீவக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!