புற்று நோயாளர்களின் நலன் கருதி முன்வைக்கப்பட்ட விசேட நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி..!

????????????????????????????????????
புற்று நோயாளர்களின் நலன் கருதி, சைக்லோரோன் கதிர்வீச்சு ஔடதங்கள் உற்பத்தி நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் ஊடாக, புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை வீதத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனைகளுக்காக ப்ளோரா டியொக்சி குளுகோஸ் எனும் மருந்து பயன்படுத்தப்படுகின்றது.

இதன்படி, குறித்த மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால், இந்தியாவினால் கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும், செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் குறித்த மருந்தின் ஊடாக, நோயாளர் ஒருவருக்கு 54 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மருந்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதின் ஊடாக, அதனை 14 ஆயிரம் ரூபா வரை குறைத்துக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மருந்து உற்பத்தி நிலையத்தை வேரஹரவில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின், வைத்தியசாலை வளாகத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, ஏழாயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ” E – கிராம உத்தியோகத்தர்” கருத்திட்டத்தை அமுல்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த திட்டம் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 162 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அதன் இரண்டாம் கட்டமாக ஏழாயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ” E – கிராம உத்தியோகத்தர் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!