யாழ்ப்பாணத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் ஆய்வு கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நல்லூர் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளில் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம் பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியாமல் போனதால் அவர்களிடம் மீளவும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள். இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்றவர்கள்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியலாளர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கும் இன்று தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!