பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் மே 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!