ரஞ்சனின் மனுவை விசாரிக்காமலேயே நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்ட​னை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!