அதிபர், ஆசிரியருக்கு தொற்று – மூடப்பட்டது இராமநாதன் கல்லூரி!

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இனி திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!