‘ஓட்டுச்சாவடிக்குள் கைப்பேசிகளை எடுத்து செல்லக்கூடாது’ – தலைமை தேர்தல் அதிகாரி!

”ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள், ‘மொபைல் போன்களை’ எடுத்து செல்லக் கூடாது,” என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தலைமைச் செயலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி அலுவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது, மொபைல் போன்களை எடுத்து செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!