இன்று முதல் சீனர்களுக்கு தடுப்பூசி!

சீனாவிலிருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசி இன்று முதல் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு போடப்படவுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியின் ஆறு இலட்சம் டோஸ் இலங்கைக்கு கடந்த மாதம் 31 ஆம் திகதி கொண்டு வரப்பட்டன. ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கியிருந்தார.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!