சூடு பிடிக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்; கமல், ஸ்டாலின் உள்ளிட்டோர் வாக்களித்தனர்

close up of hand and voting ballot
இந்திய – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமல்ஹாசன், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட வேட்பாளர்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு . க ஸ்டாலின் தேனாம்பேட்டையில் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, தமிழக மக்களும் தமது வாக்குகளை உத்வேகத்துடன் அளித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!