நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றில் ஆளும் தரப்புக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.

இதன்போது, அமைச்சர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் கடுமையான வார்த்தைகளை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டு, ஐந்து நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டிருந்தது

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டமை தொடர்பில், எதிர்க் கட்சியினர் கறுப்புப் பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!