பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 19 ஆம் திகதி மீள திறக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படும் நிலையில், மாணவர்களுக்குமான சீருடை முழுமையாக வழங்கப்படவில்லை இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து மாணவர்களுக்குமான சீருடைகள் வழங்கப்படவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!