அங்கஜன் மூலம் அரச வேலைக்கு பாலியல் இஞ்சம் கேட்ட அரச அதிகாரி கைது!

அரசாங்க தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்க பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த இந்த பெண், அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை சந்திக்க சென்றபோது அங்கிருந்த அரச அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் தனது நண்பர் எனக் கூறி, அரசாங்க தொழிலை பெற்று தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

இந்த பெண் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனிடம் கூறியதை அடுத்து, அவர், அதனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் பொலிஸார் அந்த அரச அதிகாரியை கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!