பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் திடீர் மரணம்!

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதில் காலமானார். தனது கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் காலமானதாக பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார். நேற்று ஏப்ரல் 9ம் திகதி காலை வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்தது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து அரச குடும்பமும் அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என பக்கிங்காம் அரண்மனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய பிரச்சினை காரணமாக பல நாட்களாக லண்டன் மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப், சமீபத்தில் தான் வீடு திரும்பினார், ஜூன் 10ம் திகதி அவருடைய 100வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பிலிப் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!