உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்: சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களுக்கும் தண்டனை வழங்கி அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அரசுடைமையாக்கப்பட்ட சொத்துக்களினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரபட்சமின்றி இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டோருக்கு தண்டனை வழங்க எதிர்ப்பார்ப்பதுடன் இது தொடர்பில் சட்டமா அதிபர் விரைவில் உரிய தரப்பினர் மீது வழக்கு தொடரவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!