புலோலியைச் சேர்ந்தவர் கொரோனாவுக்குப் பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை சுகாதார பிரிவைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். புலோலி வட கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 16ம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!