ஹிட்லராக மாறுவார் ஜனாதிபதி!

ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மக்கள் வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள். ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை. தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!