யாழ்ப்பாணத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று!

யாழ். மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு காெராேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் வைத்தியசாலை சுய தனிமைப்படுத்தல் விடுதியிலும் ஒருவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர். முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர், செட்டிதெருவில் வசிக்கும் 81 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் 12வது நபர் உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!