சர்வதேசத்தின் முன் புதிய வீரியத்துடன் எழுந்து நிற்க இப்புத்தாண்டில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் – பிரதமர்

நாட்டின் பிரஜைகளிடையே காணப்படும் உறவை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் சர்வதேசத்தின் முன் புதிய வீரியத்துடன் எழுந்து நிற்க இப்புத்தாண்டில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய சிந்தனைகள் மற்றும் அபிலாஷைகளுடன் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு வளமானநாட்டை நோக்கிய ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக பிரதமர்குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் முன்னெடுத்த அர்ப்பணிப்புகள் காரணமாகவே இந்த புத்தாண்டை இவ்வாறேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை மனதில்கொண்டு கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!