24 மணிநேரத்தில் 14 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 14 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நேற்றைய நாளில் மாத்திரம் 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில் சுமார் 121 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் விபத்துக்களில் காயமடைந்துள்ள 74 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்

மேலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டவிபத்துக்களில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் 53 பேர் உட்பட முச்சக்கர வண்டிகளில் பயணித்த 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!