ஜனாதிபதி அச்சுறுத்தியதாக கூறிய விஜேதாச மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதமை வருத்தமளிப்பதாகவும் கூறினார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கெஹலிய ரம்புக்வெல்ல, நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காது என்றும் நாட்டின் வளங்களை வெளிநாட்டுக்கு விற்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்தமையை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை மிரட்டியதாக விஜயதாச ராஜபக்ஷ நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!