மேதின பேரணிகளை தவிர்க்க முடிவு!

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது தொழிலாளர் தினத்தை குறிக்கும் வகையில் மே தின கொண்டாட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!