இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்,

இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.,

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் குஷிநகர் பகுதியில் இருந்து இலங்கைக்கான விமானசேவையொன்றை எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க திட்டமிப்பட்டிருந்தாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

எவ்வாறாயினும் இந்தியாவின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு அதனை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்,

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மற்றும் இந்தியா ஆகிய இடையிலான விமான சேவைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!