24 மணிநேரத்தில் 969 பேருக்கு கொரோனா தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குருநாகலில் 251 பேருக்கும் கம்பஹாவில் 236 பேருக்கும் கொழும்பில் 194 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

களுத்துறையில் 48 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 38 பேருக்கும் காலியில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் 28 பேரும் மாத்தறையில் 26 பேரும் அநுராதபுரத்தில் 23 பேரும் மாத்தளையில் 21 பேரும் வவுனியாவில் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் 11 பேருக்கும் மொனராகலையில் 10 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 09 பேருக்கும் திருகோணமலையில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!