ரிஷாட் பதியுதீன் கைதுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்தார்.

ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கத்திடம் சாட்சியங்கள் இல்லை என்பதாலேயே அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சாட்சியங்கள் இருந்தால் நாட்டிலுள்ள சாதாரணச் சட்டங்களின் கீழ் அவரை முடிந்தால் கைது செய்துக் காட்டுங்கள் எனவும் சவால் விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!