யாழில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் வைத்தியசாலையில்..!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்

கைதடி பகுதியில் இருந்து பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றும் ராணுவ வாகனமொன்றுடன் மோதியதில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவத்தில் ராணுவ பணியாளர்கள் 15 பேர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பம் தொடர்பில் ராணுவம் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இதேவேளை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!