ரிஷாத் பதியுதீனுக்கு 90 நாட்கள் விளக்கமறியல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விருவரும், சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டு, இன்று வரையிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், இருவரையும் 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!