1923 – கொரோனா புதிய உச்சம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1923 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 113,676 ஆக உயர்வடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!