கொரோனா நேற்று புதிய உச்சம்! – 2 ஆயிரத்தை நெருங்கியது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1939 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 529ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!