COVID தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

COVID தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளாந்தம் கூடுகின்ற COVID தடுப்புக் குழுவுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறுகிய காலத்தில் முடிந்தளவு தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார்.

தொற்றாளர்கள் அடையாளங்காணப்படும் இடங்களை முடக்குதல், கட்டுப்பாடுகளை அமுல்படுத்துதல், நோய் பரவுவதைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!