வடக்கில் மேலும் 21 பேருக்கு தொற்று! – யாழ். மேலதிக அரச அதிபரும் சிக்கினார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

> யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!