பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நாட்டை 75 வீதம் அல்லது முழுமையாக முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஊரடங்கு உத்தரவு அல்ல, பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு தொடர்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!