பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!