மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது

இதன்படி, கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் இரண்டாயிரத்து 573 பேர் அடையாளங் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களில் ஒரு லட்சத்து ஐயாயிரத்து 611 பேர் இதுவரை குணமடைந்துள்ள பின்னணியில், 22 ஆயிரத்து 118 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!